கிருஷ்ணாபுரம் அருகே தீக்காயம் அடைந்த முதியவர் சாவு


கிருஷ்ணாபுரம் அருகே தீக்காயம் அடைந்த முதியவர் சாவு
x
தினத்தந்தி 4 May 2022 6:03 PM GMT (Updated: 4 May 2022 6:03 PM GMT)

கிருஷ்ணாபுரம் அருகே தீக்காயம் அடைந்த முதியவர் இறந்தார்.

தர்மபுரி:
தர்மபுரி மாவட்டம் கிருஷ்ணாபுரம் அருகே உள்ள கன்னிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முத்து (வயது 73). இவர் வீட்டின் வெளியே உள்ள மாட்டு கொட்டகை பகுதியில் கட்டிலில் படுத்து தூங்குவது வழக்கம். கடந்த சில நாட்களுக்கு முன்பு பீடி குடித்த இவர் அதை அணைக்காமல் கட்டிலின் அருகே போட்டுவிட்டு தூங்கியதாக கூறப்படுகிறது. அப்போது கட்டிலில் இருந்த போர்வையில் தீப்பிடித்து அவர் மீதும் தீ பரவியது. அவருடைய அலறல் சத்தம் கேட்டு குடும்பத்தினர் அங்கு ஓடிவந்தனர். தீக்காயமடைந்த அவரை  மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி முத்து உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து கிருஷ்ணாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Tags :
Next Story