வீட்டில் பிணமாக கிடந்த கோர்ட்டு ஊழியர்


வீட்டில் பிணமாக கிடந்த கோர்ட்டு ஊழியர்
x
தினத்தந்தி 4 May 2022 6:39 PM GMT (Updated: 4 May 2022 6:39 PM GMT)

அளவுக்கு அதிகமாக மது குடித்து கோர்ட்டு ஊழியர் வீட்டில் பிணமாக கிடந்தார்.

பெரம்பலூர், 
பெரம்பலூர் முத்துலட்சுமி நகர் 3-வது குறுக்கு தெருவில் வசித்து வருபவர் செந்தில்குமார் (வயது 46). இவர் குன்னம் நீதிமன்றத்தில் அமீனாவாக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ஜெயசித்ரா மங்கலமேடு போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு ஹரிப்பிரியா (8) என்ற பெண் குழந்தை உள்ளது. செந்தில்குமார் அளவுக்கு அதிகமாக மது அருந்தி வந்துள்ளார். இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் ஜெயசித்ரா தனது மகளுடன் மாமியாரான சக்குபாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். நேற்று மதியம் ஜெயசித்ரா தனது வீட்டிற்கு சென்று பார்த்தபோது கடும் துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகம் அடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் பெரம்பலூர் இன்ஸ்பெக்டர் முருகேசன், சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது செந்தில்குமார் அளவுக்கு அதிகமாக மது குடித்து இறந்து கிடந்தது தெரியவந்தது. பின்னர் அவரது உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story