முதியவர் மர்ம சாவு


முதியவர் மர்ம சாவு
x
தினத்தந்தி 9 May 2022 8:06 PM GMT (Updated: 9 May 2022 8:06 PM GMT)

சிவகாசி அருகே முதியவர் மர்மமான முறையில் இறந்தார்.

சிவகாசி, 
சிவகாசி அருகே உள்ள தேவர்குளம் ராஜிவ்காந்தி நகரை சேர்ந்தவர் சண்முகவேல் (வயது 82). இவர் தனது மருமகன் சக்திவேல் வீட்டில் வசித்து வந்தார். வயது மூப்பு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்து வந்தார். இதற்கிடையில் சம்பவத்தன்று வீட்டின் கழிவறையில் சண்முகவேல் உடல் எரிந்த நிலையில் கிடந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், சண்முகவேல் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து சக்திவேல் கொடுத்த புகாரின் பேரில் திருத்தங்கல் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் அவர் தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Related Tags :
Next Story