பிளஸ்-1 பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது


பிளஸ்-1 பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது
x
தினத்தந்தி 9 May 2022 9:37 PM GMT (Updated: 9 May 2022 9:37 PM GMT)

பிளஸ்-1 மாணவ, மாணவிகளுக்கான பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது.

பெரம்பலூர்:
தமிழகம் முழுவதும் பிளஸ்-1 மாணவ-மாணவிகளுக்கு 2021-22-ம் கல்வி ஆண்டிற்கான அரசு பொதுத்தேர்வுகள் இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்கி வருகிற 31-ந்தேதி வரை நடைபெறவுள்ளது. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு பள்ளிகள், அரசு ஆதிதிராவிடர் நலப்பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் மற்றும் சுயநிதி பள்ளிகளில் பிளஸ்-1 பயிலும் மாணவ-மாணவிகள் அரசு பொதுத்தேர்வினை எழுதவுள்ளனர். இன்று தமிழ் தேர்வு நடக்கிறது. காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1.15 மணி வரை தேர்வு நடக்கிறது.
பெரம்பலூர் மாவட்டத்தில் பிளஸ்-1 அரசு பொதுத்தேர்வை 79 பள்ளிகளை சேர்ந்த 4,112 மாணவர்களும், 3,857 மாணவிகளும் என மொத்தம் 7,969 பேர் 32 தேர்வு மையங்களில் எழுத உள்ளனர்.

Next Story