பேரிடர் மீட்பாளர்களுக்கு பயிற்சி


பேரிடர் மீட்பாளர்களுக்கு பயிற்சி
x
தினத்தந்தி 10 May 2022 5:45 PM GMT (Updated: 10 May 2022 5:45 PM GMT)

பேரிடர் மீட்பாளர்களுக்கு பயிற்சி நடைபெற்றது.

புதுக்கோட்டை:
புதுக்கோட்டை நகராட்சி, கோவில்பட்டியில் உள்ள சமுதாய கூடத்தில், பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில், குறுவட்ட அளவிலான பேரிடர் முதல்நிலை மீட்பாளர்களுக்கு, ஒரு நாள் பயிற்சி நடைபெற்றது. இதனை கலெக்டர் கவிதாராமு தொடங்கி வைத்து பேசுகையில், ‘‘பேரிடர் காலங்களில் உடனடியாக அலுவலர்களுக்கு தகவலினை அளித்து முன்னிற்பவர்கள் தன்னார்வலர்கள் ஆவர். முதல்நிலை மீட்பாளர்கள் தாமாகவே முன்வந்து உதவி புரிகிறீர்கள். கிராமங்களில் ஏற்படும் பேரிடர் காலங்களில் முதல் தகவலினை அளிப்பவர்களும் முதல்நிலை மீட்பாளர்களே. புதுக்கோட்டை மாவட்டத்தில் 3,500 முதல்நிலை மீட்பாளர்கள் உள்ளனர். முதல்நிலை மீட்பாளர்களுக்கு 3 கட்ட பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளது. இப்பயிற்சியினை சிறந்த முறையில் மேற்கொள்ள வேண்டும். விபத்து, ஆபத்து, பேரிடர் மற்றும் தீ விபத்து ஏற்படும் காலங்களில் முதலில் சென்று நிற்பது பேரிடர் முதல்நிலை மீட்பாளர்கள் ஆவர். இப்பயிற்சியில் பேரிடர் காலங்களில் செயல்படும் வழிமுறைகளும், பேரிடர் இடங்களில் செயல்படும் முறைகள் குறித்தும் போன்ற பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது. முதல்நிலை மீட்பாளர்களின் அலைபேசி எண்களை தெரிவிப்பதன்மூலம், பேரிடர் காலங்களில் தொடர்பு கொள்வதற்கு உதவியாக அமையும். எனவே புதுக்கோட்டை மாவட்டத்தில் பேரிடர் காலங்களில் மீட்பு பணிகள் சிறந்த முறையில் செய்ய வேண்டும்’’ என்றார். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, வருவாய் கோட்டாட்சியர் அபிநயா, மாவட்ட தீயணைப்பு அலுவலர் பானுபிரியா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story