காரிமங்கலம் அருகே ஏரியில் மண் அள்ளி கடத்திய டிராக்டர் பறிமுதல்


காரிமங்கலம் அருகே ஏரியில் மண் அள்ளி கடத்திய டிராக்டர் பறிமுதல்
x
தினத்தந்தி 10 May 2022 5:52 PM GMT (Updated: 10 May 2022 5:52 PM GMT)

காரிமங்கலம் அருகே ஏரியில் மண் அள்ளி கடத்திய டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது.

காரிமங்கலம்:
காரிமங்கலம் அருகே ராமியம்பட்டி ஏரி பகுதியில் வருவாய்த்துறை அதிகாரிகள் ரோந்து சென்றனர். அப்போது ஏரியில் இருந்து மண் ஏற்றிச் சென்ற டிராக்டரை நிறுத்தி டிரைவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் அதே பகுதியை சேர்ந்த சக்திவேல் என்பதும், டிராக்டரில் மண் அள்ளி கடத்தியதும் தெரியவந்தது. இதையடுத்து டிராக்டரை அதிகாரிகள் பறிமுதல் செய்து காரிமங்கலம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து பைசுஅள்ளி கிராம நிர்வாக அலுவலர் மாயக்கண்ணன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story