வழிதவறி ஊருக்குள் புகுந்த புள்ளிமான்


வழிதவறி ஊருக்குள் புகுந்த புள்ளிமான்
x
தினத்தந்தி 10 May 2022 6:19 PM GMT (Updated: 10 May 2022 6:19 PM GMT)

வழிதவறி வந்த புள்ளிமான் ஊருக்குள் புகுந்தது.

உசிலம்பட்டி, 
உசிலம்பட்டி அருகே உள்ள புத்தூர் மலைப்பகுதியில் இருந்து வழிதவறி புள்ளிமான் ஒன்று மலைப்பட்டி கிராமத்திற்குள் புகுந்தது. அதனை தெருநாய்கள் கடிக்க துரத்தியதில் புள்ளிமானுக்கு காலில் காயம் ஏற்பட்டது. இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் புள்ளிமானை மீட்டு வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் வனத்துறையினர் அங்கு சென்று மானை மீட்டனர். காயம் அடைந்த புள்ளிமானுக்கு சிகிச்சை அளித்து காயம் சரியானதும் வனப்பகுதிக்குள் விடப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். 

Next Story