சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாள் அனுமதி


சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாள் அனுமதி
x
தினத்தந்தி 10 May 2022 6:42 PM GMT (Updated: 10 May 2022 6:42 PM GMT)

பவுர்ணமியை முன்னிட்டு சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாள் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

வத்திராயிருப்பு, 
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு பிரதோஷம் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு வரும் 13-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய கோவில் நிர்வாகம் அனுமதி வழங்கி உள்ளது. பக்தர்கள் பகல் 7 மணி முதல் 11 மணிவரை மட்டுமே மலை ஏற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை, கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர். அனுமதி நாட்களில் மழை பெய்தால் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு்்ள்ளது. தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் வனப்பகுதியில் எளிதில் தீப்பற்றும் பொருட்களை கொண்டு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் இரவு நேரங்களில் மலைப்பகுதியில் தங்குவதற்கு கோவில் நிர்வாகம் தடை விதித்துள்ளது. மேலும் கோவிலுக்கு செல்லும் மலைப் பாதைகளில் உள்ள நீரோடை பகுதிகளில் பக்தர்கள் இறங்கி குளிப்பதற்கும்  தடை விதிக்கப்பட்டுள்ளது.  முக கவசம் அணிந்து வந்தால் மட்டுமே கோவிலில் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.


Next Story