பெத்தநாயக்கன்பாளையம் அருகே கரகாட்டம் ஆட வந்த பெண், மயிலாட்ட கலைஞருடன் ஓட்டம் கணவர் போலீசில் புகார்


பெத்தநாயக்கன்பாளையம் அருகே கரகாட்டம் ஆட வந்த பெண், மயிலாட்ட கலைஞருடன் ஓட்டம் கணவர் போலீசில் புகார்
x
தினத்தந்தி 10 May 2022 10:44 PM GMT (Updated: 10 May 2022 10:44 PM GMT)

பெத்தநாயக்கன்பாளையம் அருகே கரகாட்டம் ஆட வந்த பெண், மயிலாட்ட கலைஞருடன் ஓட்டம் பிடித்ததால், கணவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.

பெத்தநாயக்கன்பாளையம், 
பெத்தநாயக்கன்பாளையம் தாலுகா வேப்பந்தட்டை பகுதியை சேர்ந்தவர் சரத்குமார் மனைவி ராஜேஸ்வரி (வயது 21). இவர்கள் இருவரும் கரகாட்ட கலைஞர்கள். இவர்களுக்கு 1½ வயதில் ஒரு குழந்தை உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு படையாச்சி பகுதியில் உள்ள ஒரு கோவில் விழாவுக்கு கணவன்- மனைவி இருவரும் கரகாட்டம் ஆட வந்தனர். நள்ளிரவு நேரம் ராஜேஸ்வரியை திடீரென காணவில்லை. அப்போது அவர்களது குழுவில் உள்ள மயிலாட்ட கலைஞர் வினோத்குமார் என்பவரையும் காணவில்லையாம். கரகாட்ட பெண்ணுடன், மயிலாட்ட கலைஞர் ஓட்டம் பிடித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து ராஜேஸ்வரியின் கணவர் சரத்குமார் கொடுத்த புகாரின் பேரில் ஏத்தாப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

Next Story