அரிசி அரவை ஆலை உரிமையாளர் தற்கொலை


அரிசி அரவை ஆலை உரிமையாளர் தற்கொலை
x
தினத்தந்தி 11 May 2022 12:57 AM GMT (Updated: 11 May 2022 12:57 AM GMT)

அரிசி அரவை ஆலை உரிமையாளர் தற்கொலை செய்து கொண்டார்.

கீழப்பழுவூர்:
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழப்பழுவூரை சேர்ந்தவர் ரவி(வயது 55). அரிசி அரவை ஆலை உரிமையாளர். சம்பவத்தன்று இவர் மது குடித்துவிட்டு வந்ததாகவும், இதனால் அவருடைய மனைவி வள்ளியம்மை திட்டிவிட்டு வெளியே சென்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ரவி, தனியாக இருந்தபோது மதுவில் பூச்சி மருந்தை(விஷம்) கலந்து குடித்துள்ளார். இதையடுத்து அவரை அவரது குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கீழப்பழுவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story