விஷம் குடித்து முதியவர் தற்கொலை


விஷம் குடித்து முதியவர் தற்கொலை
x
தினத்தந்தி 11 May 2022 2:11 PM GMT (Updated: 11 May 2022 2:11 PM GMT)

வேதாரண்யம் அருகே விஷம் குடித்து முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.

வேதாரண்யம், மே.12-
வேதாரண்யம் அருகே உள்ள ஆயக்காரன்புலம் மலையான் குத்தகை பகுதியை சேர்ந்தவர் உலகநாதன்(வயது69). விவசாயியான இவா்  உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார். சம்பவத்தன்று அகஸ்தியம்பள்ளியில் உள்ள தன் மருமகள் வீட்டுக்கு சென்ற உலகநாதன் வயிற்று வலி தாங்க முடியாமல் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீ்ட்டு சிகிச்சைக்காகவேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உலகநாதன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து வேதாரண்யம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story