தொப்பூர் அருகே விஷம் குடித்து மாட்டு வியாபாரி தற்கொலை


தொப்பூர் அருகே விஷம் குடித்து மாட்டு வியாபாரி தற்கொலை
x
தினத்தந்தி 11 May 2022 4:17 PM GMT (Updated: 11 May 2022 4:17 PM GMT)

தொப்பூர் அருகே மாட்டு வியாபாரி தொப்பூர் அருகே விஷம் குடித்து மாட்டு வியாபாரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

நல்லம்பள்ளி:
தொப்பூர் அருகே பட்டகப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் வெங்கட்ராமன் (வயது 80). மாட்டு வியாபாரி. நேற்று முன்தினம் இவர் விஷம் குடித்து விட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், அவரை மீட்டு தா்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி முதியவர் பரிதாபமாக இறந்தார். முதியவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story