தொழிலாளி திடீர் சாவு


தொழிலாளி திடீர் சாவு
x
தினத்தந்தி 11 May 2022 4:53 PM GMT (Updated: 11 May 2022 4:53 PM GMT)

கடலூரில் முதுநகரில் தொழிலாளி உயிரிழந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடலூர் முதுநகர், 

கடலூர் முதுநகர் சான்றோர்பாளையத்தை சேர்ந்தவர் புஷ்பராஜ் (வயது 46), கூலி தொழிலாளியான இவர் சம்பவத்தன்று வீட்டில் இருந்தபோது, திடீரென மயங்கி கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி, புஷ்பராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து புகாரின் பேரில் கடலூர் முதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story