விபத்தில் மின்கணக்கீட்டாளர் பலி


விபத்தில் மின்கணக்கீட்டாளர் பலி
x
தினத்தந்தி 11 May 2022 4:57 PM GMT (Updated: 11 May 2022 4:57 PM GMT)

விபத்தில் மின்கணக்கீட்டாளர் பலியானார்.

தேன்கனிக்கோட்டை:
ஊத்தங்கரை கவர்னர் தோப்பு பகுதியை சேர்ந்தவர் கருணாநிதி (வயது 47). இவர் ஓசூர் மின்வாரிய அலுவலகத்தில் மின் கணக்கீட்டாளராக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று அவர் இருதுகோட்டை பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது எதிரே வந்த மோட்டார் சைக்கிளும், இவர் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்டன. இதில் படுகாயம் அடைந்த கருணாநிதி சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பலியானார். விபத்து குறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story