செம்மறி ஆடுகள் திருடிய 2 பேர் கைது


செம்மறி ஆடுகள் திருடிய 2 பேர் கைது
x
தினத்தந்தி 11 May 2022 5:05 PM GMT (Updated: 11 May 2022 5:05 PM GMT)

செம்மறி ஆடுகள் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

க.பரமத்தி, 
தென்னிலை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர்கள் தில்லைகரசி, சரவணன் மற்றும் போலீசார் தென்னிலை அருகே உள்ள வைரமடை சோதனைச்சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அதில் இருந்த 2 பேரிடம் சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் தென்னிலை அருகே கோவில்பாளையத்தை சேர்ந்த சம்பத்குமார் (வயது 32), ஈரோடு மாவட்டம், ஊஞ்சலூர் அருகே புரவிபாளையத்தை சேர்ந்த பிரேம்ரஞ்சன் (26) என்பதும், இவர்கள் 2 பேரும் சேர்ந்து தென்னிலை பகுதியை சேர்ந்த ஈஸ்வரன், கனகராஜ் ஆகியோருக்கு சொந்தமான தலா 2 செம்மறி ஆடுகளை திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட கார் மற்றும் ஆடுகள் விற்ற தொகை ரூ.30 ஆயிரத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.


Next Story