விநாயகர் கோவிலில் சிறப்பு வழிபாடு


கரூர்
x
கரூர்
தினத்தந்தி 11 May 2022 5:06 PM GMT (Updated: 11 May 2022 5:06 PM GMT)

விநாயகர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.

நொய்யல், 
நஞ்சை புகழூர் தவுட்டுப்பாளையம் அக்ரஹாரத்தில் பிரசித்தி பெற்ற அத்தியம்மா விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில் மாணிக்க விநாயகர், கற்பக விநாயகர், கல்யாண விநாயகர், முருகர், துர்க்கா தேவி என பரிவார தெய்வங்களும் உள்ளன. இக்கோவிலில் வருடாந்திர சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதையடுத்து சுவாமிக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அஷ்ட தசபூஜ மகாலட்சுமி துர்க்க தேவி வெள்ளிக் கவசத்தில் காட்சி அளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story