வரத்து அதிகரிப்பால் தேங்காய் விலை வீழ்ச்சி


கரூர்
x
கரூர்
தினத்தந்தி 11 May 2022 5:16 PM GMT (Updated: 11 May 2022 5:16 PM GMT)

வரத்து அதிகரிப்பால் தேங்காய் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது

நொய்யல், 
நொய்யல், மரவாபாளையம், குளத்துப்பாளையம், வேட்டமங்கலம், குந்தாணி பாளையம், ஓலப்பாளையம்  உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயிகள் தென்னை பயிரிட்டுள்ளார். தென்னை மரத்தில் தேங்காய் விளைந்தவுடன் பறித்து மொத்தமாகவும், சில்லறையாகவும் விற்பனை செய்து வருகின்றனர். கடந்த வாரம் அதிகபட்சமாக கிலோ ரூ.27.25-க்கும், குறைந்த பட்சமாக ரூ.20-க்கும், சராசரியாக ரூ.26.50-க்கும் ஏலம் போனது. இந்த வாரம் நடைபெற்ற ‌ஏலத்தில் அதிகபட்சமாக கிலோ ‌ஒன்று ரூ.26.50-க்கும், குறைந்தபட்சமாக ரூ.20-க்கும், சராசரியாக ரூ.‌25.50-க்கும் ஏலம் போனது. வரத்து அதிகரிப்பால் தேங்காய் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.


Next Story