மோட்டார் சைக்கிள் திருட்டு: போலீசார் வலைவீச்சு


கரூர்
x
கரூர்
தினத்தந்தி 11 May 2022 5:24 PM GMT (Updated: 11 May 2022 5:24 PM GMT)

மோட்டார் சைக்கிள் திருடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கரூர், 
கரூர் பெரிய ஆண்டாங்கோவில் பகுதியை சேர்ந்தவர் நாகலிங்கம் (வயது 29). பெயிண்டர். இவர் தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் முன்பு நிறுத்தி இருந்தார். பின்னர் காலையில் எழுந்து வந்து பார்த்தபோது அவரது மோட்டார் சைக்கிளை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் கரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிந்து, மோட்டார் சைக்கிளை திருடி சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

Next Story