மேலூர் அருகே பூஞ்சுத்தியில் ஒரு வயலில் உள்ள கிணற்றில் சாக்கு மூடை மிதந்தது. ேமலும் அதில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் கொலைசெய்யப்பட்டு பிணத்தை மூடையில் வைத்து கிணற்றில் வீசி இருப்பார்களா என பொதுமக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், இதுபற்றி தகவல் கிடைத்து வந்த மேலூர் போலீசார் அந்த சாக்கு மூடையை மீட்டு சோதனை செய்தனர். அப்போது அதனுள் அழுகிய நிலையில் ஒரு கன்றுக்குட்டி இருந்தது. இறந்துபோன கன்றுக்குட்டியின் உடலை யாரோ சாக்கு மூடையில் கட்டி இந்த கிணற்றில் போட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இதனையடுத்து அப்பகுதி மக்கள் நிம்மதியடைந்தனர்.
கடலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு பொதுமக்கள் திடீரென சாலை மறியல் செய்தனர். அப்போது போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே தள்ளு, முள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது
புதுக்கோட்டை அரசு போக்குவரத்து கழகம் நகராட்சிக்கு வரி பாக்கி செலுத்தாததால் ஜப்தி செய்ய வந்த அதிகாரிகள் அறிவிப்பு பதாகை வைத்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.