கத்தியை காட்டி மிரட்டி வாலிபரிடம் பணம் பறிப்பு


கத்தியை காட்டி மிரட்டி வாலிபரிடம் பணம் பறிப்பு
x
தினத்தந்தி 11 May 2022 7:32 PM GMT (Updated: 11 May 2022 7:32 PM GMT)

கத்தியை காட்டி மிரட்டி வாலிபரிடம் பணம் பறிக்கப்பட்டது.

திருச்சி, கே.கே.நகர், சுப்பிரமணியபுரம் பகுதியை சேர்ந்தவர் பிலால். இவர் அப்பகுதியில் உள்ள உணவகத்தில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று வேலை முடிந்து வீடு திரும்பி சென்ற போது, திண்டுக்கல் மாவட்டம், பேகம்பூர் பகுதியை சேர்ந்த அகமது  மகன் தாஜூதீன் (23) என்பவர் கத்தியை காட்டி மிரட்டி அவரிடமிருந்த ரூ.2 ஆயிரம் மற்றும் செல்போனை பறித்து சென்று விட்டார். இது குறித்த புகாரின் பேரில் கே.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story