ஆலமரத்தில் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு


ஆலமரத்தில் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 11 May 2022 7:33 PM GMT (Updated: 11 May 2022 7:33 PM GMT)

அருப்புக்கோட்டை ரெயில்வே கேட் அருகே ஆலமரத்தில் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

அருப்புக்கோட்டை, 
அருப்புக்கோட்டை அருகே உள்ள தொட்டியாங்குளம் ெரயில்வே கேட் அருகே ஆலமரத்தில் திடீரென தீப்பற்றி எரிவதாக அருப்புக்கோட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு விரைந்து சென்ற தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயபாண்டி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் ஆலமரத்தில் பற்றிய தீயினை போராடி அணைத்தனர். ெரயில்வே கேட் அருகே ஆலமரத்தில் திடீரென தீப்பற்றி எரிந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 


Related Tags :
Next Story