நெல் அறுவடை பணிகள் தீவிரம்


நெல் அறுவடை பணிகள் தீவிரம்
x
தினத்தந்தி 11 May 2022 7:48 PM GMT (Updated: 11 May 2022 7:48 PM GMT)

வத்திராயிருப்பு பகுதியில் நெல் அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

வத்திராயிருப்பு, 
வத்திராயிருப்பு பகுதியில் நெல் அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 
நெல் சாகுபடி 
வத்திராயிருப்பு தாலுகாவிற்கு உட்பட்ட வத்திராயிருப்பு, கூமாபட்டி, கான்சாபுரம், மகாராஜபுரம், சுந்தரபாண்டியம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஆண்டு முழுவதும் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. 
தற்போது கோடைகால சாகுபடி செய்யப்பட்ட நெல்கள் அனைத்தும் நன்கு விளைந்து அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கோடைகால நெல் அறுவடையை விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தொடங்கி உள்ளனர். 
அறுவடை பணி 
இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில்:-
வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார  பகுதிகளிலும், கிராமப்புறங்களிலும் ஆயிரக்கணக்கான ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது இப்பகுதிகளில் தொடர்ச்சியாக பெய்த தொடர் மழையின் காரணமாக நீர் நிலைகளிலும், அணை பகுதிகளிலும், கண்மாய்களில் போதுமான அளவு தண்ணீர் இருந்ததால் தொடர்ச்சியாக இந்தாண்டு கோடை கால விவசாய பணியினை விவசாயிகள் மேற்கொண்டனர். 
தற்ேபாது அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. போதுமான அளவு தண்ணீர் இருந்ததால் விளைச்சல் நன்றாக உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story