மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த விவசாயி சாவு


மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த விவசாயி  சாவு
x
தினத்தந்தி 11 May 2022 9:30 PM GMT (Updated: 11 May 2022 9:30 PM GMT)

மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த விவசாயி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

வேப்பந்தட்டை, 
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள பாண்டகப்பாடியை சேர்ந்தவர் கணேசன் (வயது 52), விவசாயி. இவர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பாண்டகப்பாடியிலிருந்து பெரம்பலூர் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். வேப்பந்தட்டை சார்பதிவாளர் அலுவலகம் அருகே சென்ற போது எதிர்பாராத விதமாக நாய் ஒன்று குறுக்கே வந்ததால் நிலைத்தடுமாறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த அவர் பெரம்பலூர் அரசு மருத்துவமனையிலும் பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி கணேசன் நேற்று உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து அரும்பாவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story