பிளஸ்-2 வேதியியல் தேர்வை 6,073 மாணவ, மாணவிகள் எழுதினர்


பிளஸ்-2 வேதியியல் தேர்வை 6,073 மாணவ, மாணவிகள் எழுதினர்
x
தினத்தந்தி 13 May 2022 9:25 PM GMT (Updated: 13 May 2022 9:25 PM GMT)

பிளஸ்-2 வேதியியல் தேர்வை 6,073 மாணவ, மாணவிகள் எழுதினர்.

அரியலூர்:

தமிழகத்தில் தற்போது 10 மற்றும் பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கு அரசு பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. நேற்று பிளஸ்-2 வகுப்புக்கு வேதியியல், கணக்கு பதிவியல், புவியியல் ஆகிய பாடங்களுக்கான தேர்வு நடந்தது. அரியலூர் மாவட்டத்தில் பிளஸ்-2 வேதியியல் பாட தேர்வினை எழுத 6,244 மாணவ-மாணவிகள் தகுதி பெற்றிருந்தனர். இதில் 6,073 பேர் தேர்வினை எழுதினர். 171 பேர் தேர்வு எழுத வரவில்லை. மாவட்டத்தில் கணக்கு பதிவியல் தேர்வினை எழுத 1,993 மாணவ-மாணவிகள் தகுதி பெற்றிருந்தனர். இதில் 1,922 பேர் தேர்வினை எழுதினர். 71 பேர் தேர்வு எழுத வரவில்லை. மாவட்டத்தில் புவியியல் தேர்வினை எழுத 34 மாணவ-மாணவிகள் தகுதி பெற்றிருந்தனர். இதில் 30 பேர் தேர்வினை எழுதினர். 4 பேர் தேர்வு எழுத வரவில்லை.

Next Story