உணவு பூங்காவுக்கு சீல் வைப்பு


உணவு பூங்காவுக்கு சீல் வைப்பு
x
தினத்தந்தி 13 May 2022 10:05 PM GMT (Updated: 13 May 2022 10:22 PM GMT)

நெல்லையில் உணவு பூங்காவுக்கு சீல் வைக்கப்பட்டது.

நெல்லை:
நெல்லை மாநகராட்சி மேலப்பாளையம் மண்டல பகுதிக்கு உட்பட்ட தெற்கு புறவழிச்சாலையில் அனுமதி இல்லாமல் இயங்கி வந்ததாக கூறப்பட்ட நெல்லை ‘புட் பார்க்’ எனும் உணவு பூங்கா கட்டமைப்பினை மாநகராட்சி ஆணையாளர் விஷ்ணு சந்திரன் உத்தரவுப்படி, உள்ளூர் திட்ட குழுமத்தின் இணை இயக்குனர் ரங்கநாதன், மாநகராட்சி பொறியாளர் நாராயணன், மேலப்பாளையம் மண்டல உதவி ஆணையாளர் அய்யப்பன் ஆகியோர் முன்னிலையில், மாநகராட்சி பணியாளர்கள் நேற்று பூட்டி சீல் வைத்தனர்.

Next Story