குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது


குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது
x
தினத்தந்தி 13 May 2022 11:14 PM GMT (Updated: 13 May 2022 11:14 PM GMT)

குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.

மதுரை, 
மதுரை திடீர்நகர் மேலவாசல் பகுதியை சேர்ந்தவர் ரவி. இவரது மகன் ஜெபமணி (வயது 32). நகரில் உள்ள போலீஸ் நிலையங்களில் இவர் மீது கொலை, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. எனவே இவரை குண்டர் சட்டத்தில் கைது செய்யுமாறு மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார். அதன் பேரில் போலீசார் குண்டர் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து ஜெபமணியை கைது செய்தனர்.


Next Story