எலி மருந்து தின்று கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார்.


எலி மருந்து தின்று கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார்.
x
தினத்தந்தி 15 May 2022 7:00 PM GMT (Updated: 15 May 2022 7:00 PM GMT)

எலி மருந்து தின்று கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார்.

அறந்தாங்கி:
அறந்தாங்கி அருகன்குளம் பகுதியை சேர்ந்தவர் பரமசிவம். இவரது மகன் சதீஸ்குமார் (வயது 19). இவர் ஆவுடையார்கோவிலில் உள்ள கல்லூரியில் படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 9-ந் தேதி வயிற்று வலி காரணமாக வீட்டில் இருந்த எலி மருந்தை தின்று உள்ளார். இதையடுத்து அவரை அவரது உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சதீஷ்குமார் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அறந்தாங்கி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story