விபத்தில் ஒருவர் பலி


விபத்தில் ஒருவர் பலி
x
தினத்தந்தி 15 May 2022 8:01 PM GMT (Updated: 15 May 2022 8:01 PM GMT)

காரியாபட்டி அருகே விபத்தில் ஒருவர் பலியானார்.

காரியாபட்டி, 
காரியாபட்டி அருகே டி.வேப்பங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன் (வயது 40). அதே ஊரை சேர்ந்தவர் ராஜா (28). இவர்கள் இருவரும் டி.வேப்பங்குளம் கிராமத்தில் இருந்து காரியாபட்டி செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் நரிக்குடி-காரியாபட்டி சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த கார் மோட்டார் சைக்கிளின் மீது மோதியதில் கண்ணன்,  ராஜா ஆகியோர் படுகாயம் அடைந்தனர். பின்னர் அவர்கள் இருவரையும் காரியாபட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அப்போது கண்ணனை பரிசோதித்த டாக்டர், அவர் ஏற்கனவே  இறந்துவிட்டதாக தெரிவித்தார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. படுகாயமடைந்த ராஜா, மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இந்த விபத்து குறித்து அ.முக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். 

Related Tags :
Next Story