மோட்டார் சைக்கிள்கள் மோதல்; காயமடைந்த பெண் பரிதாபமாக இறந்தார்.


மோட்டார் சைக்கிள்கள் மோதல்; காயமடைந்த பெண்  பரிதாபமாக இறந்தார்.
x
தினத்தந்தி 17 May 2022 6:14 PM GMT (Updated: 17 May 2022 6:14 PM GMT)

மோட்டார் சைக்கிள்கள் மோதல்; காயமடைந்த பெண் பரிதாபமாக இறந்தார்.

ஆவூர்:
திருச்சி கே.கே. நகரை அடுத்த சாத்தனூரை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 55). இவரும் இவரது மனைவி வசந்தா (51) ஆகிய இருவரும் கடந்த 15-ந் தேதி சாத்தனூரில் இருந்து மோட்டார் சைக்கிளில் மாத்தூர் வழியாகக் கீரனூருக்கு சென்றனர். மோட்டார் சைக்கிளை கோவிந்தராஜ் ஓட்டி செல்ல வசந்தா பின்னால் அமர்ந்து சென்றார். அப்போது மாத்தூர் ரிங் ரோடு அருகே அவர்கள் சென்றபோது லெட்சுமணன்பட்டியை சேர்ந்த பாலு (20) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும், கோவிந்தராஜ் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிளும் மோதியது. இதில் 3 பேரும் சாலையில் விழுந்து காயமடைந்தனர். பின்னர் அவர்கள் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வசந்தா இன்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மாத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story