பெங்களூரு விமான நிலையத்தில் ரூ.1¼ கோடி தங்கம் பறிமுதல்


பெங்களூரு விமான நிலையத்தில் ரூ.1¼ கோடி தங்கம் பறிமுதல்
x
தினத்தந்தி 9 April 2023 6:45 PM GMT (Updated: 9 April 2023 6:45 PM GMT)

பெங்களூரு விமான நிலையத்தில் ரூ.1¼ கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மலேசியாவை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெங்களூரு:

உள்ளாடைக்குள் தங்கம்

பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு வெளிநாட்டில் இருந்து தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, வெளிநாடுகளில் இருந்து பெங்களூருவுக்கு வந்த விமான பயணிகள் மற்றும் அவர்களது உடைமைகளையும் அதிகாரிகள், போலீசார் சோதனை நடத்தினார்கள்.

அப்போது துபாயில் இருந்து வந்த விமானத்தில் வந்திறங்கிய 3 பயணிகளின் நடவடிக்கைகள் சந்தேகம் ஏற்பட்டது. முதலில் அவர்களிடம் சோதனை நடத்திய போது தங்கம் எதுவும் கிடைக்கவில்லை. பின்னர் ரகசிய அறைக்கு அழைத்து சென்று விசாரணை நடத்திய போது உள்ளாடைக்குள் 3 பேரும் தங்கத்தை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

ரூ.1.33 கோடி மதிப்பு

அதாவது ஒருவரிடம் உள்ளாடைக்குள் 2 தங்க கட்டிகளும், மற்ற 2 பயணிகளின் உள்ளாடைக்குள் பேஸ்ட் மாதிரியிலும் தங்கம் இருந்தது. ஒட்டு மொத்தமாக 2 கிலோ 280 கிராம் தங்கம் இருந்தது. அந்த தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தார்கள். அவற்றின் மதிப்பு ரூ.1.33 கோடி என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, மலேசியாவை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் 3 பேரிடமும், கடத்தல் கும்பலினர் தங்கத்தை கொடுத்து அனுப்பியது தெரியவந்துள்ளது. இதுகுறித்து கைதான 3 பேர் மீதும் விமான நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


Next Story