வாகா எல்லை வழியாக இந்தியா வரும் அபிநந்தனை வரவேற்க ஏற்பாடுகள்


வாகா எல்லை வழியாக இந்தியா வரும் அபிநந்தனை வரவேற்க ஏற்பாடுகள்
x
தினத்தந்தி 1 March 2019 5:19 AM GMT (Updated: 1 March 2019 8:17 AM GMT)

வாகா எல்லை வழியாக இந்தியா வரும் அபிநந்தனை வரவேற்க ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. #AbhinandanVarthaman

புதுடெல்லி

பாகிஸ்தானில் இருந்து விடுவிக்கப்படும் விமானப்படை வீரர் அபிநந்தன்  ராவல்பிண்டி ராணுவ முகாமில் இருந்து லாகூருக்கு விமானத்தில் அழைத்து வரப்படுகிறார். பின்னர் லாகூரில் இருந்து சாலை மார்க்கமாக வாகா எல்லை வழியாக இந்தியா அழைத்து வரப்படுகிறார். ஆனால் இதுபற்றி அதிகாரபூர்வ தகவல் இல்லை.

இந்திய  எல்லையில் அவருக்கு  சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. வாகா பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.  பஞ்சாப் முதல்வர் அமிரீந்தர் சிங் அபிநந்தனை வரவேற்கிறார். பின்னர்  மூத்த ராணுவ அதிகாரிகளுடனான ஆலோசனைக்கு பிறகு, அவர் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்படுவார்.

Next Story