மத்தியில் காங்கிரஸ் ஆட்சியமைக்கும் -காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி


மத்தியில் காங்கிரஸ் ஆட்சியமைக்கும்  -காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி
x
தினத்தந்தி 19 April 2019 1:25 PM GMT (Updated: 19 April 2019 1:25 PM GMT)

மத்தியில் மோடி ஆட்சியை அகற்றிவிட்டு காங்கிரஸ் ஆட்சியமைக்கும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

குஜராத் மாநிலத்தில் பிரசாரம் மேற்கொண்டுவிட்டு கர்நாடகம் வந்த ராகுல் காந்தி, ராய்சூரில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசுகையில், பிரதமர் மோடி தேசத்தின் பாதுகாப்பு தொடர்பாக பேசுகிறார். ஆனால் கோடிக்கணக்கான இளைஞர்களை வேலையில்லாமல் ஆக்குவதால் இந்திய தேசம்  வலிமையடையாது. 2019 தேர்தலில் மத்தியில் மோடி ஆட்சியை நீக்க வேண்டும் என்று மக்கள் முடிவு செய்துவிட்டனர். மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமையும். 

குஜராத்திலும் மக்கள் மோடியை அகற்றவே விரும்புகிறார்கள். அவர்களின் முடிவை உங்களிடம் நான் தெரிவிக்கிறேன். மோடி நாட்டுக்கு மட்டுமில்லை, குஜராத்திற்கும் எதுவும் செய்யவில்லை என குஜராத் மக்கள் தெரிவிக்கிறார்கள். மோடி பணியாற்றியது எல்லாம் கோடீஸ்வர தொழில் அதிபர்களுக்குதான், எங்களுடைய லட்சக்கணக்கான ஏக்கர் நிலத்தை மோடி தொழில் அதிபர்களுக்குதான் கொடுத்தார் என மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். குஜராத்தில் காங்கிரஸ் கட்சிக்குதான் ஆதரவு உள்ளது என கூறியுள்ளார்.

Next Story