தேர்தல் பிரசாரத்திற்காக சென்ற பா.ஜ.க. வேட்பாளர் கார் விபத்தில் காயம்


தேர்தல் பிரசாரத்திற்காக சென்ற பா.ஜ.க. வேட்பாளர் கார் விபத்தில் காயம்
x
தினத்தந்தி 5 May 2019 1:56 AM GMT (Updated: 5 May 2019 1:56 AM GMT)

தேர்தல் பிரசாரத்திற்காக சென்ற பா.ஜ.க. வேட்பாளர் கார் விபத்தில் காயம் அடைந்துள்ளார்.

கொல்கத்தா, 

மேற்கு வங்காளத்தின் போங்கான் (தனி) தொகுதியில் பா.ஜ.க. சார்பில் சாந்தனு தாகூர் என்பவர் போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் நாளை வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், நேற்று இவர் இறுதிக்கட்ட பிரசாரத்துக்காக கல்வானி என்ற பகுதிக்கு காரில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது எதிரே வந்த போலீஸ் வேன் ஒன்று நிலைதடுமாறி சாந்தனு தாகூர் கார் மீது மோதியது. இதில் சாந்தனு தாகூர் உள்பட 4 பேர் படுகாயமடைந்தனர்.

உடனடியாக அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். தலையில் படுகாயத்துடன் தீவிர சிகிச்சை பெற்று வரும் சாந்தனு தாகூர் அபாய கட்டத்தை தாண்டி உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.

Next Story