பா.ஜனதா கூட்டணி 300 தொகுதிகளில் வெற்றிப்பெறும் - பிரதமர் மோடி
பா.ஜனதா கூட்டணி 300 நாடாளுமன்றத் தொகுதிகளில் வெற்றிப்பெறும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலின் 7 வது கட்டத் தேர்தல் வாக்குப்பதிவு 19-ம் தேதி நடக்கிறது.
இறுதிக்கட்ட பிரசாரத்தில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டுள்ளன. மத்திய பிரதேச மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி பேசுகையில், பா.ஜனதா கூட்டணி 300 நாடாளுமன்றத் தொகுதிகளில் வெற்றிப்பெறும் எனக் குறிப்பிட்டார். இந்த ஞாயிறு அன்று நீங்கள் வாக்களிக்கும் போது வரலாற்றை மாற்ற உள்ளீர்கள், மீண்டும் மெஜாரிட்டியான அரசு மத்தியில் அமையும் எனக் குறிப்பிட்டார்.
Related Tags :
Next Story