காஷ்மீரில் தேடுதல் வேட்டையில் 4 பயங்கரவாதிகள் சுட்டு கொலை


காஷ்மீரில் தேடுதல் வேட்டையில் 4 பயங்கரவாதிகள் சுட்டு கொலை
x
தினத்தந்தி 7 Jun 2019 3:33 AM GMT (Updated: 7 Jun 2019 3:33 AM GMT)

காஷ்மீரில் தேடுதல் வேட்டையில் 4 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.

ஜம்மு,

ஜம்மு மற்றும் காஷ்மீரின் புல்வாமா நகரில் லஸ்சிபோரா பகுதியில் சந்தேகத்திற்குரிய வகையில் பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளனர் என கிடைத்த உளவு தகவலை தொடர்ந்து பாதுகாப்பு படையினர் அங்கு சென்று அப்பகுதியை தங்களது கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இதன்பின் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.  இதில் பயங்கரவாதிகளுக்கும், படையினருக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது.  இந்த மோதலில் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.  தொடர்ந்து நடந்த சண்டையில் மற்றொரு பயங்கரவாதியும் கொல்லப்பட்டார்.

அவர்களிடம் இருந்து 3 ஏ.கே. ரக துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.  தொடர்ந்து துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது.

Next Story