நான் ஏன் ராஜினாமா செய்ய வேண்டும்? குமாரசாமி கேள்வி


நான் ஏன் ராஜினாமா செய்ய வேண்டும்? குமாரசாமி கேள்வி
x
தினத்தந்தி 11 July 2019 12:13 PM GMT (Updated: 11 July 2019 12:13 PM GMT)

நான் ஏன் ராஜினாமா செய்ய வேண்டும் என கர்நாடக முதல் மந்திரி குமாரசாமி கேள்வி எழுப்பி உள்ளார்.

பெங்களூரு,

கர்நாடக அரசியல் சிக்கல் உச்சக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் குமாரசாமி இன்று ஆலோசனை நடத்தினார். இதைத்தொடர்ந்து அவர் ராஜினாமா செய்யப்போவதாக தகவல்கள் வெளியாகின. இதுபற்றி அவரிடம் நிருபர்கள்  கேள்வி எழுப்பினர். 

அதற்கு அவர் கூறியதாவது:-

நான் ஏன் ராஜினாமா செய்ய வேண்டும். அதற்கான தேவை என்ன உள்ளது. கடந்த 2009- 2010-ம் ஆண்டுகளில் எடியூரப்பா என்ன செய்தார். அவருக்கு எதிராக 18 எம்எல்ஏக்கள் போர்க்கொடி உயர்த்தினர். ஆனால் அவர் ராஜினாமா செய்யவில்லை. ஆனால் தற்போது நான் மட்டும் ராஜினாமா செய்ய வேண்டுமா?. வேண்டுமானால் எடியூரப்பா ராஜினாமா செய்யட்டும்’’ என கூறினார்.

Next Story