100 நாள் வேலை திட்ட நிதி வழங்குவதில் தாமதம்; மத்திய அரசு மீது மம்தா குற்றச்சாட்டு


100 நாள் வேலை திட்ட நிதி வழங்குவதில் தாமதம்; மத்திய அரசு மீது மம்தா குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 5 Sep 2019 11:23 PM GMT (Updated: 5 Sep 2019 11:23 PM GMT)

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி (100 நாள் வேலை) திட்டம் தொடர்பாக மத்திய அரசு மீது மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறினார்.

கொல்கத்தா, 

 மாநில சட்ட மன்றத்தில் உறுப்பினர்களின் கேள்விக்கு இது தொடர்பாக பதிலளிக்கும்போது அவர் கூறுகையில், ‘மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்ட பணிகளை மத்திய அரசு குறைக்கிறது. இந்த திட்டத்துக்கான நிதியை வழங்க குறைந்தபட்சம் 3 மாதங்களாவது தாமதப்படுத்துகிறது. பலநேரங்களில் இது 6 மாதங்கள் வரை நீட்டிக்கப்படுகிறது. இதனால் பல பிரச்சினைகள் ஏற்படுகிறது’ என்றார்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்ட பணிகளில் மேற்கு வங்காளம் முதல் இடத்தில் இருப்பதாக கூறிய மம்தா பானர்ஜி, மாநில நீர்பாசனத்துறை, பஞ்சாயத்துகள் மற்றும் மீன்வளத்துறையின் உதவியால் 3 லட்சம் நீர்நிலைகள் உருவாக்கப்பட்டு இருப்பதாகவும் பெருமிதம் தெரிவித்தார்.

Next Story