கர்நாடக முன்னாள் மந்திரி சிவக்குமாரின் மகளுக்கு அமலாக்கத்துறை சம்மன் - நாளை ஆஜராக உத்தரவு


கர்நாடக முன்னாள் மந்திரி சிவக்குமாரின் மகளுக்கு அமலாக்கத்துறை சம்மன் - நாளை ஆஜராக உத்தரவு
x
தினத்தந்தி 10 Sep 2019 10:00 PM GMT (Updated: 10 Sep 2019 9:25 PM GMT)

சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில், கர்நாடக முன்னாள் மந்திரி சிவக்குமாரின் மகளுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது.

பெங்களூரு,

கர்நாடக மாநில முன்னாள் மந்திரி டி.கே.சிவக்குமாருக்கு சொந்தமான டெல்லி வீட்டில் ரூ.8.59 கோடி கணக்கில் வராத பணம் சிக்கியது. இதுகுறித்து விசாரணை நடத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த 3-ந் தேதி அவரை கைது செய்தனர். அவர் தற்போது போலீஸ் காவலில் உள்ளார். அவரிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் டி.கே.சிவக்குமாருக்கு நெருக்கமானவர்களிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தினர். இதற்கிடையே டி.கே.சிவக்குமாரின் மகள் ஐஸ்வர்யாவுக்கு அமலாக்கத்துறை 12-ந் தேதி (அதாவது நாளை) நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பியுள்ளது. ஐஸ்வர்யாவின் வங்கிக்கணக்கில் இருந்து ஒரு தனியார் நிறுவனத்திற்கு ரூ.20 கோடி ஆன்லைன் பணப்பரிமாற்றம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து விசாரணை நடத்தவே அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Next Story