சீனர்களைப் போல இந்திய அரசு தனது தேசிய நலனுக்கு ஏற்ப முடிவெடுக்க வேண்டும் -ஈரான்


சீனர்களைப் போல இந்திய அரசு தனது தேசிய நலனுக்கு ஏற்ப முடிவெடுக்க வேண்டும் -ஈரான்
x
தினத்தந்தி 11 Sep 2019 6:02 AM GMT (Updated: 11 Sep 2019 7:19 AM GMT)

சீனர்களைப் போல இந்திய அரசு தனது தேசிய நலனுக்கு ஏற்ப முடிவுவெடுக்க வேண்டும் என இந்தியாவுக்கான ஈரான் தூதர் அலி செகேனி தெரிவித்து உள்ளார்.

புதுடெல்லி,

அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடைகள் காரணமாக ஈரானில் இருந்து எண்ணெய் இறக்குமதியை நிறுத்துவதற்கான இந்தியாவின் முடிவு இந்தியா-ஈரான் இருதரப்பு வர்த்தகத்தையும், சபாஹர் துறைமுகத்தில் இந்தியாவின் எதிர்காலத்தையும் பாதிக்கிறது என்று இந்தியாவுக்கான ஈரான்  தூதர் அலி செகேனி தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு மே 2-க்குப் பின்னர் அமெரிக்க பொருளாதாரத் தடைகள் மற்றும் எண்ணெய் இறக்குமதி  “ஜீரோ அவுட்”  இணங்குவதற்கான அரசாங்கத்தின் முடிவு குறித்த முதல் பொதுக்கருத்தை இந்திய தூதர் வெளியிட்டு உள்ளார்.

இந்தியா "அதன் சுதந்திரத்திற்காக கடுமையாக போராடுகிறது" அமெரிக்கா "ஒருதலைப்பட்ச பொருளாதாரத் தடைகளை" விதிக்க கூடாது.

இது குறித்து ஈரான் தூதர் அலி செகேனி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஈரானில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதை இந்தியா நிறுத்தியது இப்போது அதிகாரப்பூர்வமானது, ஏனெனில் அது தனது சொந்த தேசிய நலனை கருதுகிறது. இந்தியாவில் இருந்து எண்ணெய் இறக்குமதி ஏதும் இல்லை  என்றால், நாம் எப்படி இந்தியாவிலிருந்து வாங்க முடியும்? இது இந்தியாவின் இறையாண்மை முடிவு, ஆனால் மற்றவர்கள் வித்தியாசமாக தேர்வு செய்துள்ளனர் (ஈரானுடனான தங்கள்  வர்த்தகத்தை தொடர்ந்த சீனா, ரஷ்யா மற்றும் துருக்கி ஆகியவற்றைக் குறிப்பிடுகிறார்) என கூறினார்.

இந்தியாவுக்கு அதிக அக்கறை செலுத்த வேண்டியது சபாஹர் துறைமுகத்தில் இந்தியா 2016 ஆம் ஆண்டு முதல் ஷாஹித் பெஹெஷ்டி முனையத்தை நிர்மாணிப்பது ஆப்கானிஸ்தான் மற்றும் மத்திய ஆசியாவிற்கான அதன் வர்த்தக மற்றும் இணைப்பு பாதைகளில் ஒரு முக்கிய அங்கமாகும் இதனை சுட்டி காட்டி உள்ளார் ஈரானிய தூதர்.

சபாஹருக்கு அமெரிக்கா பொருளாதாரத் தடை தள்ளுபடி இருந்தபோதிலும்,  செகேனி, இந்தியாவின் வளர்ச்சிப் பணிகள் "மிகவும் மெதுவாக" இருப்பதாகவும், ஆப்கானிஸ்தானுக்கான வர்த்தகம் இருக்க வேண்டியதை விட "மிகக் குறைவானது" என்றும் கூறினார்.

சஹாஹானில்  ஆப்கானிஸ்தான் எல்லையுடன் சபாஹர் துறைமுகத்தை இணைக்கும் ரெயில் பாதை அமைப்பதற்கான இந்தியாவின் திட்டங்கள் தாமதமாக இருப்பதைக் கருத்தில் கொண்டு, ஈரானிய அரசாங்கம் 2021-க்குள் தனது சொந்த  நிதிமூலம் ரெயில் பாதையை முடிக்க முடிவு செய்துள்ளது என்றும் கூறினார்.

ஈரான் இப்போது சீனா-பாகிஸ்தான் பொருளாதார தாழ்வாரத்தில் (சிபிஇசி) சீனாவுக்கு எல்.என்.ஜி குழாய் இணைப்பு குறித்து விவாதித்து வருகிறது, ஏனெனில் ஈரானில் இருந்து எல்.என்.ஜி இறக்குமதியில் இந்தியா தனது முன் ஆர்வத்தைத் தக்க வைத்துக் கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படவில்லை என்றும் கூறினார்.

இந்தியா எரிசக்தி பாதுகாப்பை விரும்பினால், அது ஈரானை நம்பகமான சப்ளையராக எண்ண வேண்டும், ”நாங்கள் இந்திய மக்களை நேசிக்கிறோம். ஆனால் நம்மை நேசிக்க யாரையாவது கட்டாயப்படுத்த முடியாது. இந்திய அரசு சீனர்களைப் போல தனது தேசிய நலனுக்கு ஏற்ப முடிவு செய்ய வேண்டும் என கூறினார்.

Next Story