பெங்களூரு நிகழ்ச்சியில் ஒரே மேடையில் எடியூரப்பா, சித்தராமையா!


பெங்களூரு நிகழ்ச்சியில் ஒரே மேடையில் எடியூரப்பா, சித்தராமையா!
x
தினத்தந்தி 19 Sep 2019 9:13 AM GMT (Updated: 19 Sep 2019 9:13 AM GMT)

பெங்களூருவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒரே மேடையில் கர்நாடக முதல்வர் எடியூரப்பா மற்றும் முன்னாள் முதல்வர் சித்தராமையா கலந்து கொண்டனர்.

பெங்களூரு,

கர்நாடக மாநில பெங்களூரு தலைநகரில்  எஸ்.சி.-எஸ்.டி.-க்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா மற்றும் முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா ஒரே மேடையில் கலந்து கொண்டனர்.

மேலும் பாஜக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஜெகதீஷ் ஷெட்டரும் கலந்து கொண்டார். நிகழ்ச்சியின் போது மேடையில் இருந்த முக்கிய தலைவர்கள் அனைவரும் ஒன்றினைந்து குத்துவிளக்கு ஏற்றி அம்பேத்கர் படத்திற்கு மலர் தூவி, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Next Story