ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு: ப.சிதம்பரத்தின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு


ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு: ப.சிதம்பரத்தின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு
x
தினத்தந்தி 3 Oct 2019 10:10 AM GMT (Updated: 3 Oct 2019 10:10 AM GMT)

ஐ.என்.எக்ஸ்.மீடியா வழக்கில் முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரத்தின் நீதிமன்றக்காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

ஐ. என். எக்ஸ் மீடியா வழக்கில் கடந்த ஆகஸ்ட் 21 ஆம் தேதி  கைது செய்யப்பட்ட முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரம் தற்போது நீதிமன்றக்காவலில் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

 ப.சிதம்பரத்தின் நீதிமன்றக்காவல் இன்றுடன் முடிவுக்கு வந்த நிலையில், டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து, சிதம்பரத்தின் நீதிமன்றக்காவலை வரும் 17 ஆம் தேதி வரை நீட்டித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. 

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப. சிதம்பரம் மீதும், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் மீதும் சிபிஐயும், அமலாக்கத்துறையும் தனித்தனியாக நடத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story