ரூ. 9 லட்சம் கோடி சந்தை மூலதனத்தை தாண்டிய முதல் இந்திய நிறுவனம்


ரூ. 9 லட்சம் கோடி சந்தை மூலதனத்தை தாண்டிய முதல் இந்திய நிறுவனம்
x
தினத்தந்தி 18 Oct 2019 8:52 AM GMT (Updated: 18 Oct 2019 8:52 AM GMT)

ரிலையன்ஸ் நிறுவனம் ரூ. 9 லட்சம் கோடி சந்தை மூலதனத்தை தாண்டிய முதல் இந்திய நிறுவனமாக திகழ்கிறது.

மும்பை

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (ஆர்ஐஎல்) ரூ. 9 லட்சம் கோடி சந்தை மூலதனத்தை தாண்டிய முதல் இந்திய நிறுவனமாக திகழ்கிறது.

 ரிலையன்ஸ்  நிறுவனம் வெள்ளிக்கிழமை நண்பகலில் ஆர்ஐஎல் பங்குகள் 1.76 சதவீதம்  உயர்ந்து ரூ  41,420.75 ஆக வர்த்தகம் செய்யப்பட்டு, நிறுவனத்தின் மதிப்பு, ரூ.9,00,666 கோடியாக மதிப்பிடப்பட்டு, லாபத்தில் இரட்டை இலக்க வளர்ச்சியை எட்டியது.

 அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட கார்ப்பரேட் வரி விகிதக் குறைப்பு ஆகியவற்றின் காரணமாக ரிலையன்ஸ்   லாபத்தில் 15 சதவீத  வளர்ச்சியைப் பெறும் என்று தரகுகள் எதிர்பார்க்கின்றன.

பெட்ரோ கெமிக்கல்களில் பலவீனத்தை ஈடுசெய்ய சில்லறை மற்றும் தொலைத் தொடர்பு வணிகங்களுக்கு குறைந்த வரி விகித நன்மை ஆகியவற்றை ஆய்வாளர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டி.சி.எஸ்)  ரிலையன்ஸ்  நிறுவனத்திற்கு பிறகு இந்தியாவின் இரண்டாவது மிக மதிப்பு வாய்ந்த நிறுவனமாகும், இதன் சந்தை மூலதனம், ரூ.7,69,483 கோடியாக உள்ளது. ஏனெனில் அதன் பங்குகள் 1 சதவீதம்  உயர்ந்து ரூ.2050.70 டாலராக வர்த்தகம் செய்யப்பட்டுள்ளன.

Next Story