சந்திரயான்-2 முடியவில்லை, விண்வெளியில் மென்மையான தரையிறக்கத்தை நிரூபிக்க முயற்சிகளையும் செய்வோம்- இஸ்ரோ சிவன்


சந்திரயான்-2 முடியவில்லை, விண்வெளியில் மென்மையான தரையிறக்கத்தை நிரூபிக்க முயற்சிகளையும் செய்வோம்- இஸ்ரோ சிவன்
x
தினத்தந்தி 2 Nov 2019 9:32 AM GMT (Updated: 2 Nov 2019 9:32 AM GMT)

சந்திரயான்-2 கதை முடியவில்லை. மீண்டும் விண்வெளியில் மென்மையான தரையிறக்கத்தை நிரூபிக்க அனைத்து முயற்சிகளையும் செய்யும் என இஸ்ரோ தலைவர் சிவன் கூறினார்.

புதுடெல்லி

டெல்லி ஐ.ஐ.டியின் பொன்விழா மாநாட்டில் இஸ்ரோ தலைவர் டாக்டர் கே.சிவன்  கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கினார். விழாவில் மொத்தம் 1,217 முதுகலை மற்றும் 825 இளங்கலை மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. 

விண்வெளி தொழில்நுட்ப கலத்தை (எஸ்.டி.சி) அமைப்பதற்காக இஸ்ரோ தலைவர்  டெல்லி ஐ.ஐ.டியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு இஸ்ரோ எதிர்காலத்தில் விண்வெளியில் மென்மையான தரையிறக்கத்தை நிரூபிக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும், சந்திரயான் 2 கதையின் முடிவு அல்ல என்று இஸ்ரோ தலைவர் சிவன் இன்று  தெரிவித்தார்.

விழாவில் இஸ்ரோ தலைவர்  சிவன் கூறியதாவது:-

வரவிருக்கும் மாதங்களில் அதிக எண்ணிக்கையிலான செயற்கைக்கோள் ஏவுதல்கள் முன்கூட்டியே  திட்டமிடப்பட்டுள்ளன. எஸ்.எஸ்.எல்.வி சில நேரங்களில் டிசம்பர் அல்லது ஜனவரி மாதங்களில் தனது பயணத்தை தொடங்கும். சந்திரயான் 2  திட்டத்தில் தொழில்நுட்பப் பகுதியில் நிலவில் மென்மையான தரையிறக்கத்தை எங்களால் அடைய முடியவில்லை,.

ஆனால் அனைத்து அமைப்புகளும் சந்திரனின் மேற்பரப்பில் இருந்து 300 மீ வரை சரியாக செயல்பட்டன. விஷயங்களை சரியான வகையில் இது நடந்து இருந்தால்  மதிப்புமிக்க  தகவல்கள் கிடைத்து இருக்கும்.

எதிர்காலத்தில் மென்மையான தரையிறக்கத்தை நிரூபிப்பதற்கு இஸ்ரோ தனது அனுபவம், அறிவு மற்றும் தொழில்நுட்ப வலிமை அனைத்தையும் பயன்படுத்தும்  என்று நான் உறுதியளிக்கிறேன்.

ஆதித்யா எல் 1 சோலார் மிஷன், மனித விண்வெளி விமானத் திட்டம் ஆகிய  திட்டங்கள் நடைமுறையில்  உள்ளன. மொபைல் தொலைபேசிகளில் நவிக் (NAVIC) சமிக்ஞைகளை வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன, இது சமூக தேவைகளுக்காக ஏராளமான பயன்பாடுகளை உருவாக்குவதற்கான பாதையைத் திறக்கும் என கூறினார்.

 மாணவர்கள் தங்கள் தொழில் விருப்பங்களை புத்திசாலித்தனமாக தேர்வு செய்ய வேண்டும். ஒரே ஒரு வாழ்க்கை மட்டுமே என்பதை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் அனைவரும் உங்கள் ஆர்வத்தையும் இயற்கையான திறமையையும் அடையாளம் கண்டு உங்கள் வாழ்க்கையை சீரமைக்க வேண்டும்.

உங்கள் ஆர்வத்தையும் ஆர்வங்களையும் பிரதிபலிக்கும் ஒரு தொழிலைத் தேர்வு செய்யுங்கள். பணத்திற்காக ஒரு வேலையைத் தேர்ந்தெடுப்பதை விட, உங்கள் மகிழ்ச்சிக்காக அதைத் தேர்ந்தெடுங்கள்.

உங்களுக்கு திறன்களும் பலங்களும் தேவை. நீங்கள் இசை அல்லது கிரிக்கெட்டில் ஆர்வமாக இருக்கலாம். ஆனால், இசை அல்லது விளையாட்டு போன்ற மிகவும் போட்டித் துறைகளில் வெற்றிபெற உங்களுக்கு திறமையும் திறனும்  உள்ளதா?  என பார்க்க வேண்டும்.

ஒரு வெற்றிகரமான வாழ்க்கையை அடைய   மேதைகளாகவோ அல்லது சிறந்த திறன் உள்ளவர்களாகவோ இருக்க தேவையில்லை என கூறினார்.

Next Story