2020-ம் ஆண்டில் ஆசியாவிலேயே அதிக அளவில் இந்தியாவில் ஊழியர்களின் சம்பள விகிதம் உயரக்கூடும்


2020-ம் ஆண்டில் ஆசியாவிலேயே அதிக அளவில் இந்தியாவில் ஊழியர்களின் சம்பள விகிதம் உயரக்கூடும்
x
தினத்தந்தி 2 Dec 2019 10:16 AM GMT (Updated: 2 Dec 2019 11:29 AM GMT)

2020-ம் ஆண்டில் ஆசியாவிலேயே அதிக அளவில் இந்தியாவில் ஊழியர்களின் சம்பளம் 9.2 சதவீதம் உயரக்கூடும் என ஆய்வில் எதிர்பார்க்கப்படுகிறது.

புதுடெல்லி,

130-க்கும் மேற்பட்ட நாடுகளில் 25,000 நிறுவனங்களில் 2 கோடிக்கும் அதிகமான ஊழியர்களின்  தகவல்களை கொண்டது கோர்ன் ஃபெர்ரி  நிறுவனம். இந்த நிறுவனம்  வெளியிட்டு உள்ள சம்பள முன்னறிவிப்பு அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

2020-ம் ஆண்டிற்கான இந்தியாவின் சம்பள வளர்ச்சி கடந்த ஆண்டில் இருந்த 10 சதவீதத்திலிருந்து 9.2 சதவீதமாகக் குறையும். அதே நேரத்தில் பணவீக்கத்தை சரிசெய்தபின் உண்மையான சம்பளம் 2020-ம் ஆண்டில் 5 சதவீதமாக மாறக்கூடும். 2020-ம் ஆண்டில் உலகளவில் சம்பளம் சுமார் 4.9 சதவீதம் என்ற விகிதத்தில் உயரும்.

உலகளாவிய பணவீக்க கணிப்பு சுமார் 2.8 சதவீதமாக இருப்பதால், உண்மையான  சம்பள உயர்வு கணிப்பு 2.1 சதவீதமாக இருந்தது.

இந்தியாவில் பல துறைகளில் எச்சரிக்கையான நம்பிக்கையின் உணர்வு உள்ளது, இது தொடர்ந்து அதிக சம்பள உயர்வுகளைக் காட்டுகிறது.

2020-ம் ஆண்டில் சம்பளம் 5.3 சதவீதமாக உயரும் என்றும், உண்மையான சம்பளம் 3.1 சதவீதமாக இருக்கும் என்றும் பணவீக்க விகிதம் 2.2 சதவீதமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுவதால் ஆசியாவில் மிக உயர்ந்த உண்மையான சம்பள வளர்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது.

ஆசிய நாடுகளில், இந்தோனேசியாவின் சம்பள வளர்ச்சி 8.1 சதவீதமாக இருக்கும். மலேசியா, சீனா மற்றும் கொரியா முறையே 5 சதவீதம், 6 சதவீதம் மற்றும் 4.1 சதவீதம் சம்பள வளர்ச்சியைக் கொண்டிருக்கும்.

ஜப்பான் மற்றும் தைவானில் முறையே 2 சதவீதம் மற்றும் 3.9 சதவீதமாக மிகக் குறைந்த சம்பள வளர்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது என அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story