தெலுங்கானாவில் கால்நடை பெண் மருத்துவரை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற 4 பேர் சுட்டுக் கொலை


தெலுங்கானாவில் கால்நடை பெண் மருத்துவரை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற 4 பேர் சுட்டுக் கொலை
x
தினத்தந்தி 6 Dec 2019 2:12 AM GMT (Updated: 6 Dec 2019 2:27 AM GMT)

தெலுங்கானாவில் கால்நடை பெண்மருத்துவரை எரித்துக்கொன்ற 4 பேரும் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

ஐதாராபாத்,

தெலுங்கானா மாநிலம் ஷம்சாபாத் சுங்கச் சாவடி அருகே 26 வயது பெண் மருத்துவரை, லாரி ஓட்டுநர் உள்ளிட்ட நால்வர் பாலியல் பலாத்காரம் செய்து எரித்துக் கொன்றனர். இந்த கொடூர கொலையில் லாரி ஓட்டுநர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில், குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும்  போராட்டம் வலுத்து வந்தது. இந்த வழக்கில் விரைவாக நீதி கிடைக்க வழிவகை செய்யும் வகையில், சிறப்பு நீதிமன்றம் அமைத்து விசாரிக்க அங்குள்ள நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. 

இந்த நிலையில், வழக்கு விசாரணைக்காக குற்றம் நடந்த இடத்திற்கு குற்றம் சாட்டப்பட்ட  ஜோலு நவீன், கேசவலு, முகம்மது பாஷா , சிவா, ஆகிய 4 பேரும் போலீசாரால் அழைத்துச்செல்லப்பட்டனர். அப்போது,  அவர்கள் 4 பேரும் தப்பி ஓட முயன்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து,  4 பேரையும் போலீசார் என்கவுண்டரில் சுட்டுக்கொன்றனர். 


Next Story