பெங்களூரில் 2 ரவுடிகள் மீது போலீசார் துப்பாக்கி சூடு


பெங்களூரில் 2 ரவுடிகள் மீது போலீசார் துப்பாக்கி சூடு
x
தினத்தந்தி 13 Jan 2020 2:58 AM GMT (Updated: 13 Jan 2020 2:58 AM GMT)

பெங்களூரில் போலீசாரை தாக்கிய 2 ரவுடிகள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு உள்ளது.

பெங்களூரு

கர்நாடக மாநிலம் பெங்களூர் எபி.டி.எம் ஏரி அருகே இன்று அதிகாலை தகராறில் ஈடுபட்ட ரவுடிகளை பிடிக்க பெங்களூரு நகர குற்றப்பிரிவு போலீசார் சென்று உள்ளனர். அங்கு ரவுடிகள் போலீசாரை  கத்தியால் தாக்கி உள்ளனர். போலீசார் தற்காப்புக்காக  2 ரவுடிகளை  முழங்காலுக்கு  கீழே சுட்டு உள்ளனர்.  காயம் அடைந்த 2 ரவுடிகளும் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கபட்டு உள்ளனர்.


Next Story