மும்பை தாராவியில் உள்ள மேலும் 26 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி


மும்பை தாராவியில் உள்ள மேலும் 26 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
x
தினத்தந்தி 10 May 2020 1:34 PM GMT (Updated: 10 May 2020 1:34 PM GMT)

மும்பை தாராவியில் உள்ள மேலும் 26 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

மும்பை, 

இந்தியாவில் மராட்டிய மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்று அதிக பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்போதைய நிலவரப்படி மராட்டியத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 20 ஆயிரத்தை தாண்டியுள்ளது. 

ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப் பகுதியான தாராவியில் கொரோனா வைரசின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. மருத்துவ பணியாளர்கள் வீடு, வீடாக சென்று பரிசோதனை செய்த போதும் கூட இங்கு நோய் தொற்று வேகமாக பரவி வருகிறது. 

இந்நிலையில் தாராவியில் இன்று மேலும் 26 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் தாராவியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 859 ஆக உயர்ந்து உள்ளது. 

இன்று இருவர் உயிரிழந்துள்ள நிலையில் பலியானோர் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது. மேலும் அங்கு கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 222 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.


Next Story