அதிகரிக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு: இந்தியாவில் இருந்து தனது குடிமக்களை அனுப்ப சீனா முடிவு

கொரோனா வைரஸ் பாதிப்புகள் அதிகரித்து வருவதால் சீனா தனது குடிமக்களை இந்தியாவில் இருந்து அனுப்ப முடிவு செய்து உள்ளது.
புதுடெல்லி
சீன நகரமான உகானில் டிசம்பரில் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி 54 லட்சத்துக்கும் அதிகமான மக்களைப் பாதித்து உள்ளது. 3.4 லட்சம் உயிர்களை பலி வாங்கி உள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் சீனா உகானில் இருந்து சுமார் 700 இந்தியர்களை வெளியேற்றியது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நாடு 6,977 புதிய கொரோனா நோயாளிகளைப் பதிவுசெய்தது, மொத்தம் கிட்டத்தட்ட 1.38 லட்சம் பாதிப்புகள் பதிவாகி உள்ளன. ஒரே நாளில் 154 நோயாளிகள் பலியானதால் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 4,000 ஐ தாண்டியுள்ளது.
நாடு தழுவிய இரண்டு மாத ஊரடங்கை அறிவித்த பிறகு, இந்தியாவில் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கடந்த நான்கு நாட்களாக அதிகரித்து உள்ளது. கொரோனா தொற்று வைரஸால் பாதிக்கப்பட்ட முதல் 10 நாடுகளின் பட்டியலில் இந்தியா இன்று 10-வது இடத்தில் உள்ளது.
இந்த நிலையில் நாடு திரும்ப விரும்பும் குடிமக்களை திருப்பி அனுப்ப சீனா முன்வந்துள்ளது. திங்களன்று, சீன தூதரகத்தின் இணையதளத்தில் மாண்டரின் மொழியில் ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டது, வீடு திரும்ப விரும்புவோர் தங்கள் சொந்த செலவில் சிறப்பு விமானங்களில் டிக்கெட் முன்பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது.
சீனத் தூதரகத்தின் அறிவிப்பு, திரும்பிச் செல்ல விரும்புவோருக்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த விரிவான வழிகாட்டுதல்களைப் பகிர்ந்து கொண்டது. நோய்த்தொற்று இல்லாத அல்லது காய்ச்சல் அல்லது இருமல் போன்ற கொரோனா வைரஸின் அறிகுறிகள் இல்லாதவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள், மேலும் அவர்கள் அனைத்து தனிமைப்படுத்தப்பட்ட மற்றும் தொற்றுநோய் தடுப்பு ஏற்பாடுகளையும் ஏற்க வேண்டும் என்று சீனா தெரிவித்துள்ளது.
வெளியுறவு அமைச்சகம் மற்றும் தொடர்புடைய துறைகளின் ஒருங்கிணைந்த ஏற்பாட்டின் மூலம், இந்தியாவில் உள்ள சீன இராஜதந்திர மற்றும் தூதரக பணிகள் இந்தியாவில் உள்ள சர்வதேச மாணவர்கள், சுற்றுலாப் பயணிகள், தற்காலிக வணிக பார்வையாளர்கள் தற்காலிக விமானம் மூலம் திரும்ப செல்ல வேண்டிய அவசியத்தில் உள்ளன என சீனா அறிவித்து உள்ளது.
Related Tags :
Next Story