நடைபாதை வியாபாரிகளுக்கு ரூ.10 ஆயிரம் கடன் வழங்கப்படும் - மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர்


நடைபாதை வியாபாரிகளுக்கு ரூ.10 ஆயிரம் கடன் வழங்கப்படும் - மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர்
x
தினத்தந்தி 1 Jun 2020 11:23 AM GMT (Updated: 1 Jun 2020 11:23 AM GMT)

நடைபாதை வியாபாரிகளுக்கு ரூ.10 ஆயிரம் கடன் வழங்கப்படும் என்று மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

 2 லட்சம் சிறுகுறு, நடுத்தர நிறுவனங்களுக்கு ரூ.20 ஆயிரம் கோடி நிவாரணம் உதவிகள் குறித்து மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் அறிவித்தார். அதில்

* குறு நிறுவனங்களின் நிதி வரையறை 25 லட்சத்தில் இருந்து 1 கோடியாக உயர்த்தப்படுகிறது. இது, ரூ.50 லட்சத்துக்கும் குறைவாக வியாபாரம் செய்வோருக்கு பயனளிக்கும் திட்டம்.

* சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.10,000 கடனுதவி வழங்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

* சிறுகுறு நடுத்தர நிறுவனங்களுக்கு பங்கு முதலீட்டு உதவியாக ரூ.50 ஆயிரம் கோடி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

* சிறுகுறு நிறுவனங்கள் பங்கு சந்தையில் பட்டியலிட உதவும்.

* நடைபாதை வியாபாரிகளுக்கு ரூ.10 ஆயிரம் கடன் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.



Next Story