இந்தியா-சீனா எல்லை பதற்றம்: பிரதமர் மோடி - டொனால்டு டிரம்ப் தொலைபேசியில் பேச்சு


இந்தியா-சீனா எல்லை பதற்றம்: பிரதமர் மோடி - டொனால்டு டிரம்ப் தொலைபேசியில் பேச்சு
x
தினத்தந்தி 3 Jun 2020 1:09 AM GMT (Updated: 3 Jun 2020 1:09 AM GMT)

பிரதமர் மோடி, டிரம்ப் இருவரும் இந்தியா-சீனா எல்லை பதற்றம், மற்றும் அமெரிக்க கலவரம் ஆகியவை குறித்து தொலைபேசியில் 25 நிமிடம் உரையாடினர்.



புதுடெல்லி: 

இந்திய லடாக் எல்லையில் இந்திய-சீன ராணுவ வீரர்களுக்கு இடையே கடந்த மாதம் முதல் வாரத்தில் கைகலப்பும், மோதலும் ஏற்பட்டதால் அங்கு பதற்றம் நிலவுகிறது. 

20 ஆண்டுகள் பேச்சுவார்த்தைகள் நடந்துவந்தாலும் இருநாடுகளும் தங்களது 3,500 கி.மீ எல்லைய பிரச்சினையை  தீர்த்துக் கொள்ள முடியவில்லை மற்றும் ஒருவருக்கொருவர் வசம் உள்ள தொலைதூரப் பகுதிகளின் பெரிய பகுதிகளுக்கு உரிமை கோர முடியவில்லை.

அதுபோல் சர்ச்சைக்குரிய தென்சீனக் கடல் மற்றும் தைவான் நீரிணைப்புகளில் அமெரிக்க கடற்படை தனது ரோந்துப் 
பணிகளை மேற்கொண்டதன் மூலம் அமெரிக்காவுடனான சீனாவின் இராணுவ மோதல் அதிகரித்து வருகிறது. அமெரிக்கா மற்றும் சீனா ஆகியவை கொரோனா வைரஸ் தொற்றுநோயின் தோற்றம் குறித்து வார்த்தைப் போரில் ஈடுபட்டுள்ளன.

இந்தியா-சீனா இரு நாடுகளுக்கும் இடையே சமரசம் செய்து வைக்க தயாராக இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூறினார். ஆனால் அதை ஏற்க இந்தியா நாசூக்காக மறுத்துவிட்டது. இதேபோல் சீனாவும் டிரம்பின் கோரிக்கையை நிராகரித்துவிட்டது.

இந்த நிலையில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான எல்லை பதற்றம்  குறித்து பிரதமர் மோடியும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பும் இன்று 25 நிமிட தொலைபேசியில்  உரையாடினர் அப்போ முக்கியமான விஷயங்கள் பல முடிவெடுக்கபட்டு உள்ளதாக அரசு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-  

டிரம்ப் பிரதமர் மோடியை அமெரிக்காவில் நடக்கும்  ஜி 7 உச்சி மாநாட்டிற்கு அழைத்துள்ளார்.ஜனாதிபதி டிரம்ப் ... இந்தியா உள்ளிட்ட பிற முக்கிய நாடுகளையும் சேர்ப்பதற்கும் தற்போதுள்ள உறுப்பினர்களுக்கு அப்பால் குழுவின் நோக்கத்தை விரிவுபடுத்துவதற்கான தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் நடந்து வரும் உள்நாட்டு போராட்டங்கள் குறித்து பிரதமர் மோடி கவலை தெரிவித்தார், மேலும் நிலைமையை முன்கூட்டியே தீர்ப்பதற்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

இரு தலைவர்களும் "இரு நாடுகளின் கொரோனா நிலைமை… மற்றும் உலக சுகாதார அமைப்பில் சீர்திருத்தங்களின் தேவை போன்ற தலைப்பு சார்ந்த பிரச்சினைகள் குறித்து விவாதித்தனர்" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கிழக்கு லடாக் அருகே இந்தியா மற்றும் சீனாவின் இடையிலான நிலைப்பாடு குறித்து இரு தலைவர்களும் விவாதித்த விவரங்களை இந்த அறிக்கை தெரிவிக்கவில்லை.

Next Story